பாஜகவை சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ். மலையாண்டி பட்டணத்தில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற, மயில்சாமி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், வார்டு உறுப்பினர்களாக அன்புச்செல்வி, நாச்சிமுத்து, வெற்றிவேல் முருகன், ரவியும், துணைத்தலைவராக ரவி (பா.ஜ.க) ஊராட்சி துணைத் தலைவராக தேர்வானார்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ். மலையாண்டி பட்டணத்தில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற, மயில்சாமி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், வார்டு உறுப்பினர்களாக அன்புச்செல்வி, நாச்சிமுத்து, வெற்றிவேல் முருகன், ரவியும், துணைத்தலைவராக ரவி (பா.ஜ.க) ஊராட்சி துணைத் தலைவராக தேர்வானார். 



இந்நிலையில், ஊராட்சி பணிகளை வார்டு உறுப்பினர்களான அன்புச்செல்வி, நாச்சிமுத்து, வெற்றிவேல் முருகன், ஆகியோர் சரிவர செய்வதில்லை எனவும், ஊராட்சி பணிகளை முடக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும், குற்றம் எழுந்துள்ளது. 



மேலும், தமிழக அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தில் துணைத்தலைவர், தலையீடு செய்து வருவதாகவும், ஊராட்சி பணிகள் எதையும் செய்யவிடாமல் துணைத் தலைவர் ரவி முட்டுக்கட்டை போடுவதாக, கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். 

மேலும், ஊராட்சி உறுப்பினர்கள் வெற்றிவேல் முருகன், அன்புச்செல்வி, நாச்சிமுத்து ஆகியோர் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகளை செய்வதில் முட்டுக்கட்டையாக இருப்பதால், அவர்களையும் தகுதி நீக்கம் செய்யவும் ஊராட்சி துணைத் தலைவரின் அதிகாரங்களை ரத்து செய்திட வேண்டும், என வலியுறுத்தி ஊராட்சி தலைவர் மயில்சாமி தலைமையில் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதனிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...