நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

மஞ்சூர் - கோவை சாலையில், கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்களில் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. தமிழக கேரளா எல்லையையொட்டி இருப்பதால், சமீபகாலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை சாலையில் நின்று பொது மக்களை அச்சுறுத்தி வரும் நிகழ்வும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் இங்கு வந்த யானை கூட்டம், இங்குள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை நாசம் செய்து சென்றன. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த யானைக் கூட்டத்தினை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த இப்பகுதி மக்கள் காேரிக்கை வைத்துள்ளனர்.
மஞ்சூர் - கோவை சாலையில், கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்களில் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. தமிழக கேரளா எல்லையையொட்டி இருப்பதால், சமீபகாலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை சாலையில் நின்று பொது மக்களை அச்சுறுத்தி வரும் நிகழ்வும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் இங்கு வந்த யானை கூட்டம், இங்குள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை நாசம் செய்து சென்றன. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த யானைக் கூட்டத்தினை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த இப்பகுதி மக்கள் காேரிக்கை வைத்துள்ளனர்.