கோவை: சின்கோனா பகுதி நெடுஞ்சாலை சாலைகளில் தேயிலைத் தோட்ட வேலிகள் காடுபோல் வளர்ந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: சின்கோனா பகுதி நெடுஞ்சாலை சாலைகளில் தேயிலைத் தோட்ட வேலிகள் காடுபோல் வளர்ந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சின்கோனா சாலையில் இருபுறமும் தேயிலை செடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உயிர் வேலிகள் அமைக்கப்பட்டு காடுபோல் வளர்ந்துள்ளது.

இதன் காரணமாக சாலையில் எதிர் புறம் வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. மேலும், இப்பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆறு உள்ளதால் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொண்டு தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்து உடனடியாக அந்த வேலிகளை அகற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேலிகளை அகற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று வால்பாறை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சின்கோனா சாலையில் இருபுறமும் தேயிலை செடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உயிர் வேலிகள் அமைக்கப்பட்டு காடுபோல் வளர்ந்துள்ளது.
இதன் காரணமாக சாலையில் எதிர் புறம் வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. மேலும், இப்பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆறு உள்ளதால் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொண்டு தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்து உடனடியாக அந்த வேலிகளை அகற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேலிகளை அகற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று வால்பாறை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.