கோவை: ஓடும் ரயிலில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: ஓடும் ரயிலில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த 39 வயது, பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்திருந்தார். பின்னர் கோவையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அவரது இருக்கைக்கு அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர் ஒருவர் அந்தப் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை கூச்சலிட்டார்.
இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காட்பாடி வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (61) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த 39 வயது, பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்திருந்தார். பின்னர் கோவையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அவரது இருக்கைக்கு அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர் ஒருவர் அந்தப் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை கூச்சலிட்டார்.
இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காட்பாடி வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (61) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.