கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக, குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2,300 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.
கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக, குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2,300 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

இந்நிலையில், பல்வேறு கட்சிகளுக்கு சொந்தமான 6 மன்றங்கள் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுயிருந்தன. இந்நிலையில், நேற்று கட்சி மன்றங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்றன. அதில், 2 அ.தி.மு.க. கட்சி மன்றங்கள், 2 தி.மு.க. மன்றங்கள், 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மன்றம், 1 திருவள்ளுவர் சமூக மன்றம் என 6 மன்றங்களையும் பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

மாநகராட்சியின் நகரமைப்பு அதிகாரி ரவிசந்திரன் மேற்பார்வையில், ஆர் எஸ் புரம் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.
இது தவிர குளக்கரையையொட்டி 5 கோவில்கள் உள்ளன. இவற்றையும் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்வேறு கட்சிகளுக்கு சொந்தமான 6 மன்றங்கள் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுயிருந்தன. இந்நிலையில், நேற்று கட்சி மன்றங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்றன. அதில், 2 அ.தி.மு.க. கட்சி மன்றங்கள், 2 தி.மு.க. மன்றங்கள், 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மன்றம், 1 திருவள்ளுவர் சமூக மன்றம் என 6 மன்றங்களையும் பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

மாநகராட்சியின் நகரமைப்பு அதிகாரி ரவிசந்திரன் மேற்பார்வையில், ஆர் எஸ் புரம் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.
இது தவிர குளக்கரையையொட்டி 5 கோவில்கள் உள்ளன. இவற்றையும் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.