கோவை: கோவை பொள்ளாச்சி அருகே கணவன் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே கணவன் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகேயுள்ள டி நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளி பாலசுப்பிரமணியம் (68). இவருக்கு சரஸ்வதி (63) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவர் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், கணவரது இறப்பினால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதியும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
சாவிலும் இணைபிரியாத தம்பதி உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரின் உடல்களும் அதே ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அருகேயுள்ள டி நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளி பாலசுப்பிரமணியம் (68). இவருக்கு சரஸ்வதி (63) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவர் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், கணவரது இறப்பினால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதியும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
சாவிலும் இணைபிரியாத தம்பதி உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரின் உடல்களும் அதே ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.