வீட்டை வாடகைக்கு கொடுக்கும் முன் ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் - போலீசார் எச்சரிக்கை..!

கோவை: சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்த ஆந்திர மாநில கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து போலீசார், சமீபத்தில் கைது செய்தனர்.

கோவை: சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்த ஆந்திர மாநில கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். 

போலி தங்க பிஸ்கட் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வந்த அந்த கும்பலை பிடித்த கருமத்தம்பட்டி மட்டும் சூலூர் போலீசாரை டி.எஸ்.பி சூரியமூர்த்தி வெகுவாக பாராட்டினார். 

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- .சூலூர் கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு வீடு வாடகைக்கு தர வேண்டாம். அவர்கள், இதே போல கொள்ளை கும்பல் அல்லது வேறு ஏதாவது சமூக விரோத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். அவ்வாறு வீடு கேட்டு வரும் நபர்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை சரிபார்த்து பெற்றுக்கொண்டு தான் வீடுகளை வாடகைக்கு விட வேண்டும். 

இதே போல, தங்கக்கட்டி தருவதாகவும், மேலும் பல ஏமாற்று வேலை செய்பவர்கள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் துறைக்கோ அல்லது 100 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் குடியிருப்பவர்கள் வெளிமாநிலங்களுக்கு வெளியூர்களுக்கு நீண்ட நாள் பயணம் செய்வதாக இருந்தால், வீட்டை பூட்டி செல்லும் பொழுது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...