கோவையில் சோகம்..! வாழ்கையில் விரக்தி அடைந்ததால் இசைக்கலைஞர் மற்றும் தனியார் ஊழியர் தற்கொலை..!

கோவை: கோவை கோவில்பாளையம், அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 60), நாதஸ்வர கலைஞர். இவரது மனைவி மற்றும் மகன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். இதனால், ராஜன் தனியாக வசித்து வந்துள்ளார்.

கோவை: கோவை கோவில்பாளையம், அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 60), நாதஸ்வர கலைஞர். இவரது மனைவி மற்றும் மகன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். இதனால், ராஜன் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், ராஜன் சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. வியாழன் அன்று இரவு வீட்டில் இருந்த அவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப், பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட ராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல, பொள்ளாச்சி அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (44) தனியார் நிறுவன ஊழியர். சமீபத்தில், தான் இவரது மனைவி இறந்துள்ளார், இதனால் ஸ்ரீதர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று, வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதர் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இரண்டு வழக்குகளிலும் 174 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...