கோவையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வேறு பெண்னை திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க மனு!

கோவை: கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்னை ஏமாற்றி குழந்தையை கொடுத்துவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை: கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்னை ஏமாற்றி குழந்தையை கொடுத்துவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிருந்தா(21) என்ற பெண்மணி செல்வம் என்ற நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கர்ப்பமாகி குழந்தையை கொடுத்து விட்டு தற்போது தனது உறவு பெண்னை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தனக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.



மேலும் இது குறித்து அவர் கூறுகையில், இது தொடர்பாக ஏற்கனவே பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு செல்வம் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் டி.என்.ஏ சோதனையில் பிறந்த பெண் குழந்தை செல்வத்தின் குழந்தை தான் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது உறவு பெண்னை திருமணம் செய்து உள்ளதாகவும் பிருந்தா தெரிவித்தார்.

மேலும், தன்னை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் கடந்த 5 வருடங்களாக காத்து இருந்த நிலையில், தற்போது வேறு பெண்னை செல்வம் திருமணம் செய்து உள்ளதால் தன் மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தனது குடும்பத்துடன் சென்று மனு அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...