திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக பட்டை நாமம் அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக பட்டை நாமம் அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் மற்றும் விவசாய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாநகரில் 7 இடங்கள் உட்பட மாவட்டத்தின் 21 இடங்களில் தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் துவக்கி வைத்தார்.

மறியல் போராட்டத்தின் போது பேசிய அவர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு துணைபோகும் மாநில அரசுக்கு எதிராக முடிவில்லா போராட்டத்தின் தொடக்கமாக இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார்.
பின்னர், மத்திய தபால் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பட்டை நாமம் அணிந்தும், மண்சட்டியை தலையில் கவிழ்த்து வைத்தும் நூதன முறையில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் மற்றும் விவசாய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாநகரில் 7 இடங்கள் உட்பட மாவட்டத்தின் 21 இடங்களில் தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் துவக்கி வைத்தார்.
மறியல் போராட்டத்தின் போது பேசிய அவர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு துணைபோகும் மாநில அரசுக்கு எதிராக முடிவில்லா போராட்டத்தின் தொடக்கமாக இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார்.
பின்னர், மத்திய தபால் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பட்டை நாமம் அணிந்தும், மண்சட்டியை தலையில் கவிழ்த்து வைத்தும் நூதன முறையில் கலந்து கொண்டனர்.