கோவையில் ஜாதி ஒழிப்புக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு!

கோவை: கோவையில் ஜாதி ஒழிப்புக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவையில் ஜாதி ஒழிப்புக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



தந்தை பெரியாரின் ஆணைக்கிணங்க ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி ஜாதி ஒழிப்புக்காக போராடி உயிரிழந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையின் முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரியாரிய உணர்வாளர்கள் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.



அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் பேசிய ஒவ்வொருவரும் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டங்களை ஒழிக்க வேண்டும் என்றும், ஜாதியை ஒழிக்கப் போராடிய போராளிகளின் உணர்வானது என்றும் போற்றத்தக்கது என்றும் தெரிவித்தனர். ஜாதியை ஒழிக்கப் போராடிய போராளிகள் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர் அவர்களின் நினைவாக இந்நிகழ்வு நடைபெறுகிறது என தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...