கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வலசுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 56), விவசாயி. இவரது நண்பர், ராம்குமார் (24) பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வலசுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 56), விவசாயி. இவரது நண்பர், ராம்குமார் (24) பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கருப்பசாமியும் ராம்குமாரும் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனை, ராம்குமாரின் அண்ணன் சக்திவேல் கண்டித்து வந்துள்ளார். இருந்தும், அவர்கள் இருவரும் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
நேற்று இரவு மீண்டும் அவர்கள் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்த போது, இதைப்பார்த்த சக்திவேல் அங்கு சென்று ராம்குமாரை கண்டித்துள்ளார். இதனால், ஆதுரம் ஆத்திரம் அடைந்த கருப்பசாமிக்கும், சக்தி வேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சக்திவேல் அங்கிருந்த கட்டையை எடுத்து கருப்பசாமியை தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி வேலை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கருப்பசாமியும் ராம்குமாரும் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனை, ராம்குமாரின் அண்ணன் சக்திவேல் கண்டித்து வந்துள்ளார். இருந்தும், அவர்கள் இருவரும் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
நேற்று இரவு மீண்டும் அவர்கள் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்த போது, இதைப்பார்த்த சக்திவேல் அங்கு சென்று ராம்குமாரை கண்டித்துள்ளார். இதனால், ஆதுரம் ஆத்திரம் அடைந்த கருப்பசாமிக்கும், சக்தி வேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சக்திவேல் அங்கிருந்த கட்டையை எடுத்து கருப்பசாமியை தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி வேலை தேடி வருகின்றனர்.