கோவையில் முகவரி கேட்பது போல் நாடகமாடி, மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு; பைக் ஆசாமிகள் கைவரிசை

கோவை: வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை, முகவரி கேட்பது போல் நடித்து பைக் ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை, முகவரி கேட்பது போல் நடித்து பைக் ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை கணபதி வ.உ.சி வீதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பேச்சியம்மாள் (63). இவர் இன்று காலை தனது வீட்டின் முன்பு உறவினர் வருகைக்காக எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், ஒரு துண்டு பேப்பரை காட்டி இந்த முகவரி எங்கு உள்ளது என வினவி உள்ளனர்.

அப்போது, பேச்சியம்மாள் முகவரியை வாசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாய் மோட்டார் சைக்கிளில் விரைந்தனர். இதனால், அதிர்ச்சியான அவர் அலறி சத்தம் போட்டார். ஆனால், அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் 392, 397 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...