கோவை: கிணத்துக்கடவு பகுதியில் மாரடைப்பால் மகன் இறந்த சோகத்தில், 81 வயதுடைய தந்தை பூச்சி கொல்லி மருந்தை அருந்தி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் மாரடைப்பால் மகன் இறந்த சோகத்தில், 81 வயதுடைய தந்தை பூச்சி கொல்லி மருந்தை அருந்தி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு, பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமன் (81). இவருக்கு மஞ்சமலை, முனியாண்டி என்ற 2 மகன்கள் உள்ளனர், இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூத்த மகனான மஞ்சமலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனால், மனமுடைந்து காணப்பட்ட தந்தை ராமன் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டில் செடிகளுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார், மயக்க நிலையில் இருந்த ராமனை அவரது இரண்டாவது மகன் முனியாண்டி மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு, பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமன் (81). இவருக்கு மஞ்சமலை, முனியாண்டி என்ற 2 மகன்கள் உள்ளனர், இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூத்த மகனான மஞ்சமலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனால், மனமுடைந்து காணப்பட்ட தந்தை ராமன் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டில் செடிகளுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார், மயக்க நிலையில் இருந்த ராமனை அவரது இரண்டாவது மகன் முனியாண்டி மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.