கோவை: கோவை திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் நேற்று ஆய்வு செய்தார்.
கோவை: கோவையில் திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்சி சாலை மேம்பால கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஒருபுறம் வாகனப் போக்குவரத்து, மற்றொருபுறம் பாலம் கட்டுமானப் பணி என இரண்டுமே ஒரே நேரத்தில் நடப்பதால் திருச்சி சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எந்தவித பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் மேம்பாலப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், அவினாசி சாலையில் மேம்பாலப் பணிகளை தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே, திருச்சி சாலை மேம்பாலப் பணிகளை முடிக்காமல் அவினாசி மேம்பாலப் பணிகளை தொடங்க கூடாது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, உதயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்சி சாலை மேம்பால கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஒருபுறம் வாகனப் போக்குவரத்து, மற்றொருபுறம் பாலம் கட்டுமானப் பணி என இரண்டுமே ஒரே நேரத்தில் நடப்பதால் திருச்சி சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எந்தவித பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் மேம்பாலப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், அவினாசி சாலையில் மேம்பாலப் பணிகளை தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே, திருச்சி சாலை மேம்பாலப் பணிகளை முடிக்காமல் அவினாசி மேம்பாலப் பணிகளை தொடங்க கூடாது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, உதயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.