கோவையில் 166 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி வைத்திருந்த வீட்டிற்கு சீல் வைத்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

கோவை: கோவை அருகே 166 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி வைத்திருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: கோவை அருகே 166 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி வைத்திருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி மாகாளி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மனைவி தனலட்சுமி (60). இவர்கள் வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வழங்கல் அதிகாரி குமரேசன், பறக்கும் படை தாசில்தார் சிவகுமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள் நேற்று இரவு அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் 166 மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு மருந்து பெற்ற தொகுப்புகளும் ஏராளமாக இருந்தது.

விசாரணையில் அந்த அரிசி மூட்டைகள் மற்றும் குறைவான தடுப்பு மருந்து பெட்டகம் கல்வி வலையத்திலுள்ள எண் 33 என்ற ரேஷன் கடை குறியது என்பதும் அந்த கடை சிறியதாக இருந்ததால் தனலட்சுமி வீட்டை மாதம் ரூபாய் மூவாயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து ரேஷன் அரிசியை வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யாமல் அந்த வீட்டை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பாக வடவள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை வாடகை வீட்டில் வைக்க உரிய அனுமதி பெற்றார்களா? என்பது உட்பட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...