கோவை: கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கோவை: கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை, அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் 4 வயது சிறுமி கார் நிறுத்துமிடம் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, தனியாக நின்ற அந்த சிறுமிக்கு ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அந்த குழந்தை சத்தம் போட்டு அழுததால், ரவிச்சந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், வீட்டுக்கு அழுதபடி வந்த குழந்தையிடம் பெற்றோர்கள் விசாரித்த போது, காவலாளி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பற்றி குழந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து குழந்தையின் தந்தை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து, ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.