குடிநீர் விநியோக குறைபாடுகள் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு..!

கோவை: கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகிக்கப்படுகிறதா..? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகிறார்கள்.


கோவை: கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகிக்கப்படுகிறதா..? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகிறார்கள்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவைக்காக தினமும் 265.70 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர், பவானி மற்றும் ஆழியாறு திட்டங்களில் இருந்து தற்போது 181.00 எம்.எல்.டி குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. 24 வார்டுகளில், 2 நாட்களுக்கு ஒருமுறை என்கிற இடைவெளியில் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், பிற வார்டுகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்துடன், மாநகராட்சி பகுதியில் தற்போதுள்ள 2042 ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கும் கிணற்று நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து வார்டுகள் தோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...