கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்..! 51,303 பேர் சேர்க்க விண்ணப்பம்

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம்களில், புதிதாக 51,303 பேர் விண்ணப்பித்துள்ளனர், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம்களில், புதிதாக 51,303 பேர் விண்ணப்பித்துள்ளனர், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனு அளிக்கலாம், என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பெயர் சேர்க்க, திருத்த, நீக்க மனு அளித்தனர். 

அதன்படி, கோவை மாவட்டத்தில் 21 ஆம் தேதி 22,991 பேரும், 22ஆம் தேதி 43,795 பேரும் விண்ணப்பம் அளித்துள்ளனர் எனவும், 21-ஆம் தேதியை விட 22ஆம் தேதி அன்று முகாம்களில் அதிகம் பேர் மனு அளித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த முகாம்களில் பெயர் சேர்க்க/ நீக்க என மொத்தம் 66 ஆயிரத்து 786 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 51 ஆயிரத்து 303 பேர் படிவம் 6 சமர்ப்பித்துள்ளனர். மேலும், பெயர் நீக்க படிவம் 7 ஐ, 3,075 பேரும், திருத்தம் செய்ய படிவம் 8ஐ, 4465  பேரும், ஒரே தொகுதியில் திருத்தம் செய்ய படிவம் 8ஏ ஐ, 3024 பேரும் பூர்த்தி செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம், செய்ய அளிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை வருமாறு:- 

மேட்டுப்பாளையம் 6,513, சூலூர் 9,358, கவுண்டம்பாளையம் 9,019, கோவை வடக்கு 5660, தொண்டாமுத்தூர் 8,732, கோவை தெற்கு 3614, சிங்காநல்லூர் 5537 கிணத்துக்கடவு 7398, பொள்ளாச்சி 5,550, வால்பாறை 5,406. சூலூர் 9,358 பேர் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சூலூர் தொகுதிகளில் தான் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 358 பேர் விண்ணப்பித்து இருப்பது, குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...