கோவை: தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகவுள்ள நிவர் புயல், நாளை அதிதீவிர புயலாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை: தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகவுள்ள நிவர் புயல், நாளை அதிதீவிர புயலாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொரும், எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவையில் நிவார் புயல் காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், என வேளாண் பல்கலைகழகத்தின் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், "நிவார் புயல் காரணமாக கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு மட்டுமே கோவையில் வாய்ப்புள்ளது," என்றார்.
இதன் காரணமாக, இன்று முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொரும், எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவையில் நிவார் புயல் காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், என வேளாண் பல்கலைகழகத்தின் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், "நிவார் புயல் காரணமாக கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு மட்டுமே கோவையில் வாய்ப்புள்ளது," என்றார்.