கோவை: கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி அம்மாவாசை (வயது 45). இவர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வக்கீல் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவை: கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி அம்மாவாசை (வயது 45). இவர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வக்கீல் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜவேலுவின் மனைவி வக்கீல் மோகனா, வெளிமாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததும், அதற்காக போலீசார் அவரை தேடி வந்ததால், அவர் இறந்தது போல் நடித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, ராஜவேலு அலுவலகத்திற்கு குடும்ப வழக்கு தொடர்பாக விவரம் கேட்க வந்த அமாவாசையை நண்பர்களுடன் சேர்ந்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர், இறந்தது தனது மனைவி மோகனா எனக்கூறி, ராஜவேலு மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்று தனது மனைவியை காப்பாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜவேல், மோகனா (47), பொன்ராஜ் (47), பழனிச்சாமி (45), ஆகியோரை கடந்த 2014-ம் ஆண்டு, போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, கோவை ஐந்தாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிந்த நிலையில், அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இதையடுத்து, வருகிற 30-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும், என நீதிபதி முகமது பாருக் இன்று அறிவித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜவேலுவின் மனைவி வக்கீல் மோகனா, வெளிமாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததும், அதற்காக போலீசார் அவரை தேடி வந்ததால், அவர் இறந்தது போல் நடித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, ராஜவேலு அலுவலகத்திற்கு குடும்ப வழக்கு தொடர்பாக விவரம் கேட்க வந்த அமாவாசையை நண்பர்களுடன் சேர்ந்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர், இறந்தது தனது மனைவி மோகனா எனக்கூறி, ராஜவேலு மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்று தனது மனைவியை காப்பாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜவேல், மோகனா (47), பொன்ராஜ் (47), பழனிச்சாமி (45), ஆகியோரை கடந்த 2014-ம் ஆண்டு, போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, கோவை ஐந்தாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிந்த நிலையில், அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இதையடுத்து, வருகிற 30-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும், என நீதிபதி முகமது பாருக் இன்று அறிவித்தார்.