கோவை: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லியோ ஸ்டான்லி (வயது 27). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கோவை: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லியோ ஸ்டான்லி (வயது 27). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவரது நண்பர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோவிந்து (27). இவர் வடவள்ளி பகுதியில் தங்கி அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காலத்தில் இருவரும் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனர். இதனால் கோவையில் தங்கி இருந்த அறையை காலி செய்து பொருட்களை எடுத்துச் செல்ல இருவரும் நேற்று கோவிந்தனின் காரில் கோவை வந்தனர்.
வடவள்ளியில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு, ஈச்சனாரிக்கு காரில் சென்ற போது, லியோ ஸ்டான்லி காரை ஓட்டினார். அப்போது, ஈச்சனாரி அருகே வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை கடக்க ஸ்டான்லி முயன்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த ஸ்டான்லி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோவிந்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு வந்த மதுக்கரை போலீசார் லியோ ஸ்டான்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது நண்பர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோவிந்து (27). இவர் வடவள்ளி பகுதியில் தங்கி அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காலத்தில் இருவரும் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனர். இதனால் கோவையில் தங்கி இருந்த அறையை காலி செய்து பொருட்களை எடுத்துச் செல்ல இருவரும் நேற்று கோவிந்தனின் காரில் கோவை வந்தனர்.
வடவள்ளியில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு, ஈச்சனாரிக்கு காரில் சென்ற போது, லியோ ஸ்டான்லி காரை ஓட்டினார். அப்போது, ஈச்சனாரி அருகே வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை கடக்க ஸ்டான்லி முயன்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த ஸ்டான்லி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோவிந்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு வந்த மதுக்கரை போலீசார் லியோ ஸ்டான்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.