கோவை: கோவையில் பாலத்தின் மீதுள்ள சுவற்றின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பாலத்தின் மீதுள்ள சுவற்றின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பட்டி போஸ்ட், அரூர் தாலுகா, செங்குட்டை பகுதியில் வசிப்பவர் செல்வம் அவருடைய மகன் சரண் (வயது 23). சரண், தன் தாய் தந்தையோடு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கோவை கணபதி சங்கனூர் லே-அவுட் பகுதியில் தங்கி கணபதி பகுதியில் உள்ள ஒரு செல் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.
இன்று மதியம், அவர் மதிய உணவுக்காக காந்திபுரத்தில் இருந்து கணபதி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, டெஸ்டூல் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி பாலத்தின் ஓரத்தில் உள்ள சுவற்றில் பைக் மோதியது.
விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் (சென்ட்ரல்) வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பட்டி போஸ்ட், அரூர் தாலுகா, செங்குட்டை பகுதியில் வசிப்பவர் செல்வம் அவருடைய மகன் சரண் (வயது 23). சரண், தன் தாய் தந்தையோடு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கோவை கணபதி சங்கனூர் லே-அவுட் பகுதியில் தங்கி கணபதி பகுதியில் உள்ள ஒரு செல் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.
இன்று மதியம், அவர் மதிய உணவுக்காக காந்திபுரத்தில் இருந்து கணபதி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, டெஸ்டூல் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி பாலத்தின் ஓரத்தில் உள்ள சுவற்றில் பைக் மோதியது.
விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் (சென்ட்ரல்) வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.