கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பழங்குடி மக்களுக்கான வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பழங்குடி மக்களுக்கான வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, வட்டாட்சியருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று, முடிவுகள் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், வன உரிமைச் சட்டம் 2006 யின் படி அனுபவ நிலப்பட்டா, இதுவரை கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு விரைந்து வழங்குவது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இம்மாதத்தில், ஆழியாறு, சேத்துமடை, அங்கலக்குறிச்சி, டாப்சிலிப் ஆகிய நான்கு மையங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி சாதிச்சான்றிதழ்
மற்றும் பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை விரைந்து வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் பழங்குடியின மக்களின் பட்டா இல்லாத வீடுகளுக்கு, கிராம நிர்வாக அலுவலரை கொண்டு ஆய்வு செய்து விரைந்து பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கும், பட்டா இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு பெற மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றும், புளியங்கண்டி, சேத்துமடை அண்ணா நகர், தம்மம்பதி, பகுதிகளில் புதிய வீடுகள் கட்டிட பணி ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும், அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, மாலை 4 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் பரமசிவம். ஆனைமலை கமிட்டி தலைவர் அம்மாவாசை, செயலாளர் பத்மினி, உள்ளிட்ட
100க்கும், மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, வட்டாட்சியருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று, முடிவுகள் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், வன உரிமைச் சட்டம் 2006 யின் படி அனுபவ நிலப்பட்டா, இதுவரை கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு விரைந்து வழங்குவது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இம்மாதத்தில், ஆழியாறு, சேத்துமடை, அங்கலக்குறிச்சி, டாப்சிலிப் ஆகிய நான்கு மையங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி சாதிச்சான்றிதழ்
மற்றும் பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை விரைந்து வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் பழங்குடியின மக்களின் பட்டா இல்லாத வீடுகளுக்கு, கிராம நிர்வாக அலுவலரை கொண்டு ஆய்வு செய்து விரைந்து பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கும், பட்டா இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு பெற மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றும், புளியங்கண்டி, சேத்துமடை அண்ணா நகர், தம்மம்பதி, பகுதிகளில் புதிய வீடுகள் கட்டிட பணி ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும், அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, மாலை 4 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் பரமசிவம். ஆனைமலை கமிட்டி தலைவர் அம்மாவாசை, செயலாளர் பத்மினி, உள்ளிட்ட
100க்கும், மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.