கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையினரை கண்டித்து மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 



இதில் ஒருவரான வீரமணி என்பவர் நீதிமன்ற ஜாமினில் கோவை மத்திய சிறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தனது மனைவியுடன் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளரை காவல் துறையினர் நிர்பந்தித்து வருவதாகவும், தொடர்ந்து காவல் துறையினர் தன்னை கண்காணித்து வருவதோடு, அடக்குமுறை செய்வதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.



அப்போது, காவல் துறையினரை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினார். இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினை ஒன்றையும் அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...