கோவை: கோவை மாவட்டம், அன்னூர் குமரன் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35), தனியார் நிறுவன மேனேஜர். சம்பவத்தன்று, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது தெரியவந்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம், அன்னூர் குமரன் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35), தனியார் நிறுவன மேனேஜர். சம்பவத்தன்று, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது தெரியவந்துள்ளது.
அப்போது, உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் ரூ 10,000 மற்றும் மேஜையில் இருந்த லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதே போன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஜெகநாதன் என்பவர் வீட்டையும் உடைத்து பீரோவில் இருந்த ரூ 14,000 மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, லோகநாதன் மற்றும் ஜெகநாதன் அன்னூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்தது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அப்போது, உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் ரூ 10,000 மற்றும் மேஜையில் இருந்த லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதே போன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஜெகநாதன் என்பவர் வீட்டையும் உடைத்து பீரோவில் இருந்த ரூ 14,000 மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, லோகநாதன் மற்றும் ஜெகநாதன் அன்னூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்தது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.