கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள பரம்பிக்குளம் பகுதியில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஐம்பதுக்கு மேற்ப்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள பரம்பிக்குளம் பகுதியில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஐம்பதுக்கு மேற்ப்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
அந்த வனப்பகுதியை விட்டு அடிக்கடி புள்ளிமான், மயில், முயல் ஆகியவை அங்குள்ள மலைவாழ் மக்களுடன் பழகி, தினமும் அவர்கள் வீட்டுக்கு உணவு தேடி வருவது வழக்கம். இதையடுத்து, சமீபத்தில் வனத்தை விட்டு வெறியேறிய காட்டுமுயல் குட்டி ஒன்று மலைவாழ் மக்கள் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தது.
அந்த வீட்டில் பூனையம் ஒன்று வளர்த்து வருவதால், அவர்களுக்கு அந்த முயல் குட்டியை அங்கு வைப்பதில் பயம் இருந்தது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் அந்த பூனையும், முயல் குட்டியும் ஒன்றாக பழக ஆரம்பித்தது தான்..!
முயலை வேட்டை ஆடும் குணம் கொண்ட பூனையும், அந்த முயலும் நண்பர்களாக பழகி வருகிறது. பூனைக்கு செம்மீ எனவும் முயலுக்கு மோட்டோ என பெயர் வைத்து அழைக்கின்றனர். நாளடைவில் மலைவாழ் மக்கள் வீட்டில் உள்ள நபர்களிடம் ஒன்றாக உறக்குவதும், விளையாடுவதும், தட்டில் வைக்கும் உணவை ஒன்றாக சாப்பிடவதும் என அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது அந்த பூனையும், முயலும்...

தற்போது, செம்மீயும், மோட்டோவும் ஒன்றாக சாப்பிடும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரல் ஆகி வருகிறது.