கோவை கோட்டத்தில் தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூபாய் 16 கோடி வருமானம், அதிகாரிகள் தகவல்

கோவை: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கோட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்காக, சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்கள் இயக்கப்பட 8 நாட்களில் மொத்தம் 27.11 லட்சம் பயணிகள் சிறப்பு பண்டிகை கால பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ரூபாய் 16.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் ரூபாய் 31.38 கோடி வருவாய் கிடைத்தது. அப்போது, ஒரு கோடியே 60 லட்சம் பேர் பஸ்களில் பயணித்தன. இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால், சிறப்பு பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டன.

இதனால், சென்ற ஆண்டை காட்டிலும் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு, இந்த ஆண்டு குறைவாகவே வருவாய் கிடைத்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...