கோவையில் சிறுவன், சிறுமி மாயம்: கடத்தலா? என போலீசார் விசாரணை

கோவை: கோவைபுதூர், மாலை நகரைச் சேர்ந்தவர் முகைதீன் இவரது மகள் சர்மிளா என்கிற தனுஜா ஸ்ரீ (13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.


கோவை: கோவைபுதூர், மாலை நகரைச் சேர்ந்தவர் முகைதீன் இவரது மகள் சர்மிளா என்கிற தனுஜா ஸ்ரீ (13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், தனுஸ்ரீ வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்துள்ளார். இதனால், அவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். நேற்று காலை வழக்கம்போல் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், சர்மிளா மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாலையில் பெற்றோர் வீடு திரும்பிய போது, மகளை காணாததால், அச்சம் அடைந்தனர். அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், மீண்டும் வீட்டிற்கே வந்தனர். அப்போது, வீட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது.

அதில், நீங்கள் என்னை அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பதால் நான் பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயது பெண்ணுடன் வீட்டைவிட்டு செல்வதாக எழுதி இருந்தது. மேலும், அவர்களுடன் பக்கத்து வீட்டருகே வசித்து வரும் ஷியாம் (14), 8-ம் வகுப்பு மாணவனும் வந்ததாக எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவர்களது மகள் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனை, பக்கத்து வீட்டில் வசித்த பெண் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த 20 வயதுடைய பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் ஊட்டி அருகே இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கோவை போலீசார் ஊட்டிக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...