கோவை: கோவையில் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் உருவாகி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் உருவாகி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகர் பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சாக்கடைகள் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் உள்ளது. மேலும், வீடுகளில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படும் போன்றவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து தண்ணீர் தேங்குவதை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், கொசுக்கள் உற்பத்தி ஆவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகளை தெளித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில்:-
டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றப்படுகிறது. டெங்கு கொசுக்களை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தண்ணீர் தொட்டிகளை நன்கு பராமரிக்க வேண்டும். சூரிய ஒளி படாதவாறு தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்க வேண்டும். ஆய்வுக்கு வரும் போது தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மாநகர் பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சாக்கடைகள் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் உள்ளது. மேலும், வீடுகளில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படும் போன்றவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து தண்ணீர் தேங்குவதை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், கொசுக்கள் உற்பத்தி ஆவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகளை தெளித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில்:-
டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றப்படுகிறது. டெங்கு கொசுக்களை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தண்ணீர் தொட்டிகளை நன்கு பராமரிக்க வேண்டும். சூரிய ஒளி படாதவாறு தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்க வேண்டும். ஆய்வுக்கு வரும் போது தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.