கோவை: கோவையில் பிச்சை எடுப்பது போல் நடித்து கைக்குழந்தையுடன் ஒவ்வொரு தெருவாக நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடும் பெண் கும்பல் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை: கோவையில் பிச்சை எடுப்பது போல் நடித்து கைக்குழந்தையுடன் ஒவ்வொரு தெருவாக நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடும் பெண் கும்பல் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை சுந்தராபுரம், மதுக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரு பெண்கள் பிச்சை எடுப்பது போல் நடித்து குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு அங்குள்ள பொருட்களை திருடுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சி.சி.டி.வி கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மோகன் நகர், ஓம்சக்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கைக்குழந்தையுடன் இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கிடமாக சென்றனர். இவர்களை யாராவது கவனித்தால் பிச்சை எடுப்பது போல் நடந்து கொண்டு மற்ற நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடியது தெரியவந்தது.
அதேபோல, மோகன் நகர் பகுதியில் ஒருவரது வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த இவ்விரண்டு பெண்களும் அங்கிருந்த பொருட்களை கவனிப்பது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. வீட்டு வாசல் அருகே இருந்த மூட்டைகளை ஒருவர் திறந்து பார்க்க மற்றொரு பெண் ஆள் நடமாட்டத்தை கண்காணித்து உள்ளார். இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இப்படி சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் கும்பலை போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சுந்தராபுரம், மதுக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரு பெண்கள் பிச்சை எடுப்பது போல் நடித்து குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு அங்குள்ள பொருட்களை திருடுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சி.சி.டி.வி கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மோகன் நகர், ஓம்சக்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கைக்குழந்தையுடன் இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கிடமாக சென்றனர். இவர்களை யாராவது கவனித்தால் பிச்சை எடுப்பது போல் நடந்து கொண்டு மற்ற நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடியது தெரியவந்தது.
அதேபோல, மோகன் நகர் பகுதியில் ஒருவரது வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த இவ்விரண்டு பெண்களும் அங்கிருந்த பொருட்களை கவனிப்பது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. வீட்டு வாசல் அருகே இருந்த மூட்டைகளை ஒருவர் திறந்து பார்க்க மற்றொரு பெண் ஆள் நடமாட்டத்தை கண்காணித்து உள்ளார். இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இப்படி சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் கும்பலை போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.