கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பரிசோதனை முகாமிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பரிசோதனை முகாமிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தினமும் 200க்கும் குறைவான நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கோவை மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பங்கேற்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் மிகக் குறைந்த அளவிலான பேர் மட்டுமே முகாம்களில் பங்கேற்று சிகிச்சை பெறுகின்றனர். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை காய்ச்சல் முகாம்களில் மொத்தம் 92 ஆயிரத்து 907 பேர் பங்கேற்றுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
நகர் பகுதியில் தினமும் 100 முதல் 120 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. தவிர வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ள நிலையிலும் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்காமல் தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், முகாமிற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த அக்டோபரில் 1.95 லட்சம் பேரும், செப்டம்பரில் 3.55 லட்சம் பேரும், முகாமில் பங்கேற்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது 92 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். மேலும் தற்போது பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் 13 உள்ளது. தினமும் 2,500 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தினமும் 200க்கும் குறைவான நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கோவை மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பங்கேற்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் மிகக் குறைந்த அளவிலான பேர் மட்டுமே முகாம்களில் பங்கேற்று சிகிச்சை பெறுகின்றனர். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை காய்ச்சல் முகாம்களில் மொத்தம் 92 ஆயிரத்து 907 பேர் பங்கேற்றுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
நகர் பகுதியில் தினமும் 100 முதல் 120 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. தவிர வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ள நிலையிலும் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்காமல் தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், முகாமிற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த அக்டோபரில் 1.95 லட்சம் பேரும், செப்டம்பரில் 3.55 லட்சம் பேரும், முகாமில் பங்கேற்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது 92 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். மேலும் தற்போது பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் 13 உள்ளது. தினமும் 2,500 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது என்றார்.