பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை வேட்டைகாரன்புதூர் கால்வாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 93 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை வேட்டைகாரன்புதூர் கால்வாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 93 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பிஏபி தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக, ஆழியார் அணை உள்ளது. ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இதில், புதிய ஆயக்கட்டில் உள்ள வேட்டைகாரன்புதூர் கால்வாய்க்கு 18ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு சில மணி நேரத்தில் கால்வாய் துவங்கும் ஐந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில், உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் வீணாகியது.
இதையடுத்து, விவசாயிகள் பொதுப்பணிதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு சென்ற அதிகாரிகள் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை நிறுத்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மணல் மூட்டைகளை கொண்டு வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை தற்காலிகமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். வாய்க்கால் உடைப்பு சீரமைக்கப்பட்டதை அடுத்து நேற்று மீண்டும் ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 93 கனஅடி தண்ணீர் வேட்டைகாரன்புதூர் கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், மழை பெய்து வந்த நிலையில், மழை நீர் மற்றும் பாசன நீர் வாய்க்காலில் அதிகளவில் சென்றதால் உடைப்பு ஏற்பட்டது எனவும், இந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. விரைவில், அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு வாய்க்கால் முழுமையாக சீரமைக்கப்படும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஏபி தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக, ஆழியார் அணை உள்ளது. ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இதில், புதிய ஆயக்கட்டில் உள்ள வேட்டைகாரன்புதூர் கால்வாய்க்கு 18ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு சில மணி நேரத்தில் கால்வாய் துவங்கும் ஐந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில், உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் வீணாகியது.
இதையடுத்து, விவசாயிகள் பொதுப்பணிதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு சென்ற அதிகாரிகள் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை நிறுத்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மணல் மூட்டைகளை கொண்டு வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை தற்காலிகமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். வாய்க்கால் உடைப்பு சீரமைக்கப்பட்டதை அடுத்து நேற்று மீண்டும் ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 93 கனஅடி தண்ணீர் வேட்டைகாரன்புதூர் கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், மழை பெய்து வந்த நிலையில், மழை நீர் மற்றும் பாசன நீர் வாய்க்காலில் அதிகளவில் சென்றதால் உடைப்பு ஏற்பட்டது எனவும், இந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. விரைவில், அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு வாய்க்கால் முழுமையாக சீரமைக்கப்படும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.