கோவை: கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவை: கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் பிள்ளையார்புரம் செந்தமிழ் நகர் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கஸ்தூரி காலனியை சேர்ந்த முகம்மது உசேன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதுபோல, செட்டிபாளையம் ரோடு ஜி.டி டேங்க் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்ற சுகுணா புரத்தை சேர்ந்த பாலா (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் பிள்ளையார்புரம் செந்தமிழ் நகர் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கஸ்தூரி காலனியை சேர்ந்த முகம்மது உசேன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதுபோல, செட்டிபாளையம் ரோடு ஜி.டி டேங்க் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்ற சுகுணா புரத்தை சேர்ந்த பாலா (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.