நீலகிரி: நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை ஊராட்சியில் தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த தோட்ட தொழிலாளி குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை ஊராட்சியில் தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த தோட்ட தொழிலாளி குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் தேயிலை, காய்கறி தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு வசிக்கும் தோட்ட தொழிலாளி செல்வம் என்பவர் தனது தோட்டத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த தேன் கூடு கலைந்து அதிலிருந்த தேனீக்கள் செல்வத்தை சரமாரியாக கட்டியது.
அப்போது, அவரது அலறல் கேட்டு அங்கு சென்ற மற்ற தொழிலாளர்களையும் தேனீக்கள் தாக்கின.

இதில் படுகாயம் அடைந்த செல்வத்தை கிராமத்தில் ஆம்புலன்ஸ் சென்று வர அகலமான சாலை வசதி இல்லாததால் ஊர்மக்கள் தொட்டில் கட்டி தூக்கி வந்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் தேயிலை, காய்கறி தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு வசிக்கும் தோட்ட தொழிலாளி செல்வம் என்பவர் தனது தோட்டத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த தேன் கூடு கலைந்து அதிலிருந்த தேனீக்கள் செல்வத்தை சரமாரியாக கட்டியது.
அப்போது, அவரது அலறல் கேட்டு அங்கு சென்ற மற்ற தொழிலாளர்களையும் தேனீக்கள் தாக்கின.
இதில் படுகாயம் அடைந்த செல்வத்தை கிராமத்தில் ஆம்புலன்ஸ் சென்று வர அகலமான சாலை வசதி இல்லாததால் ஊர்மக்கள் தொட்டில் கட்டி தூக்கி வந்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.