நீலகிரி: உதகை நகரில் விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: உதகை நகரில் விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீத வனப்பகுதியில் யானை, காட்டெருமை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கிராமப்பகுதிகளில் உலா வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு உலா வந்த யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், இன்று காலை உதகை நகரில் உள்ள பழைய உதகை (ஓல்டு ஊட்டி) பகுதியில் தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 13 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்த காட்டெருமை குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த காட்டெருமை வயது முதிர்ந்து பழைய உதகை பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், இதுவரை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை எனவும் இருப்பினும் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீத வனப்பகுதியில் யானை, காட்டெருமை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கிராமப்பகுதிகளில் உலா வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு உலா வந்த யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், இன்று காலை உதகை நகரில் உள்ள பழைய உதகை (ஓல்டு ஊட்டி) பகுதியில் தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 13 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்த காட்டெருமை குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த காட்டெருமை வயது முதிர்ந்து பழைய உதகை பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், இதுவரை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை எனவும் இருப்பினும் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.