கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவை மாநகராட்சி 42வது வட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பி.ஆர்.நடராஜன் எம்.பி இன்று துவக்கி வைத்தார்.
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவை மாநகராட்சி 42வது வட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பி.ஆர்.நடராஜன் எம்.பி இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 42வது வார்டு சுப்பநாயக்கன்புதூரில் செல்லம்மாள் நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாமல் இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினராக இருந்த வி.இராமமூர்த்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், மாநகராட்சி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியதால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜனிடம் இப்பகுதி மக்கள் மழை நீர் வடிகால் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையேற்று, செல்லம்மாள் நகரில் மழை நீர் வடிகால் அமைக்க 14.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில், இதற்கான பணியினை வெள்ளியன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஜான்சன், முத்துக்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சிபிஎம் எஸ்எஸ்குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி மற்றும் விஜயலட்சுமி, சங்கர், ஆனந்தன், பாக்கியராஜ், திமுக வார்டு செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை மாநகராட்சி 42வது வார்டு சுப்பநாயக்கன்புதூரில் செல்லம்மாள் நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாமல் இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினராக இருந்த வி.இராமமூர்த்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், மாநகராட்சி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியதால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜனிடம் இப்பகுதி மக்கள் மழை நீர் வடிகால் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையேற்று, செல்லம்மாள் நகரில் மழை நீர் வடிகால் அமைக்க 14.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில், இதற்கான பணியினை வெள்ளியன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஜான்சன், முத்துக்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சிபிஎம் எஸ்எஸ்குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி மற்றும் விஜயலட்சுமி, சங்கர், ஆனந்தன், பாக்கியராஜ், திமுக வார்டு செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.