கோவை: பொதுத்துறை நிறுவனங்களை காக்கக் கோரி வரும் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தினை ஆதரித்து பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு சங்கத்தினர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆயத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பொதுத்துறை நிறுவனங்களை காக்கக் கோரி வரும் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தினை ஆதரித்து பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு சங்கத்தினர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆயத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நிதி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்தும், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை உடனடியாகத் துவங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை நிறுத்துவதோடு பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஜேடிஓ, ஜேஏஓ, ஜேஇ, டிடி ஆகிய பதவிகளுக்கு இலாகா தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். கொரோனாவால் மரணமடைந்த ஊழியர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவிகித ஓய்வுகால பலன்களை அமல்படுத்திட வேண்டும். அங்கீகாரப் பட்டியலிலுள்ள மருத்துவமனைகளில் ரொக்கப் பரிமாற்ற சிகிச்சையை உத்தரவாதம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு ஜிடிஐ (Group term insurance) அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், எப்என்டிஇ மற்றும் டிஇபியு ஆகிய சங்கத்தினர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் எஸ்.மகேஸ்வரன், என்எப்டிஇ மாநில துணை செயலாளர் ராபர்ட், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குடியரசு ஆகியோர் பங்கேற்றனர்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நிதி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்தும், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை உடனடியாகத் துவங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை நிறுத்துவதோடு பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஜேடிஓ, ஜேஏஓ, ஜேஇ, டிடி ஆகிய பதவிகளுக்கு இலாகா தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். கொரோனாவால் மரணமடைந்த ஊழியர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவிகித ஓய்வுகால பலன்களை அமல்படுத்திட வேண்டும். அங்கீகாரப் பட்டியலிலுள்ள மருத்துவமனைகளில் ரொக்கப் பரிமாற்ற சிகிச்சையை உத்தரவாதம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு ஜிடிஐ (Group term insurance) அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், எப்என்டிஇ மற்றும் டிஇபியு ஆகிய சங்கத்தினர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் எஸ்.மகேஸ்வரன், என்எப்டிஇ மாநில துணை செயலாளர் ராபர்ட், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குடியரசு ஆகியோர் பங்கேற்றனர்.