திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்பு!

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அதிமுகவில் திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் காங்கேயம் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில், இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலை போல மாநகர மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து உழைத்திட வேண்டும் என மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...