கோவை: வெற்றிவேல் யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளதாக கோவையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்தார்.
கோவை: வெற்றிவேல் யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளதாக கோவையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்தார்.
கோவை சிவானந்தாகாலணி பகுதியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 22ம் தேதி வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடைபெறுவதாக தெரிவித்தார்.
சிவானந்தா காலனி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் எனவும் இந்த பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் வ.உ.சி. மைதானத்தில் அரசியல் காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை எனவும் வெற்றிவேல் யாத்திரையைக் கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது என்று கூறிய அவர், காவல் துறை தடை விதித்தால் தடையை மீறி யாத்திரை நடைபெறும் என தெரிவித்தார்.
கோவை சிவானந்தாகாலணி பகுதியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 22ம் தேதி வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடைபெறுவதாக தெரிவித்தார்.
சிவானந்தா காலனி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் எனவும் இந்த பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் வ.உ.சி. மைதானத்தில் அரசியல் காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை எனவும் வெற்றிவேல் யாத்திரையைக் கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது என்று கூறிய அவர், காவல் துறை தடை விதித்தால் தடையை மீறி யாத்திரை நடைபெறும் என தெரிவித்தார்.