கோவையில் பொது இடத்தில் குப்பைகளை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்!

கோவை: கோவையில் பொது இடத்தில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவையில் பொது இடத்தில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், எச்சில் துப்பினால் 200, பொது இடங்களில் சாலை ஓரங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் என அபராதம் நிர்ணயிக்கப்பட்டு கோவை மாநகராட்சி சார்பில் பொது மக்களுடைய கவனத்திற்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகராட்சி 51வது வார்டுகுட்பட்ட ராம் நகர் அருகே உள்ள கோகுலம் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைகளை கடைக்கு முன் உள்ள சாலையில் அதன் ஊழியர்கள் தடையை மீறி கொட்டினர்.

இந்த நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், சாலையில் குப்பையை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சாலையில் தடையை மீறி குப்பை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு நேற்று ரூபாய் 5 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.

மேலும், மீண்டும் தடையை மீறி சாலையில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...