கோவை: கோவையில் பொது இடத்தில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவையில் பொது இடத்தில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், எச்சில் துப்பினால் 200, பொது இடங்களில் சாலை ஓரங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் என அபராதம் நிர்ணயிக்கப்பட்டு கோவை மாநகராட்சி சார்பில் பொது மக்களுடைய கவனத்திற்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 51வது வார்டுகுட்பட்ட ராம் நகர் அருகே உள்ள கோகுலம் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைகளை கடைக்கு முன் உள்ள சாலையில் அதன் ஊழியர்கள் தடையை மீறி கொட்டினர்.
இந்த நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், சாலையில் குப்பையை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சாலையில் தடையை மீறி குப்பை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு நேற்று ரூபாய் 5 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.
மேலும், மீண்டும் தடையை மீறி சாலையில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், எச்சில் துப்பினால் 200, பொது இடங்களில் சாலை ஓரங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் என அபராதம் நிர்ணயிக்கப்பட்டு கோவை மாநகராட்சி சார்பில் பொது மக்களுடைய கவனத்திற்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 51வது வார்டுகுட்பட்ட ராம் நகர் அருகே உள்ள கோகுலம் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைகளை கடைக்கு முன் உள்ள சாலையில் அதன் ஊழியர்கள் தடையை மீறி கொட்டினர்.
இந்த நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், சாலையில் குப்பையை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சாலையில் தடையை மீறி குப்பை கொட்டிய அந்த தனியார் நிறுவனத்திற்கு நேற்று ரூபாய் 5 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.
மேலும், மீண்டும் தடையை மீறி சாலையில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.