கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!

கோவை: திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை நகரில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அதிமுகவினரால் ஒட்டப்பட்டது எனவும் இதனை கண்டித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவை நகரில் போராட்டம் நடத்தப்பட்டது.



இந்நிலையில், இன்று கோவை நகரில் மீண்டும் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாகவும், கிண்டல் செய்யும் விதமாகவும் ரயில்நிலையம், லாலா கார்னர், டவுன்ஹால் உட்பட பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில் ஊரடங்கில் அயராது உழைத்தவரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படத்தையும், ஊரடங்கில் விக் வைத்தவரா என திமுக ஸ்டாலின் படத்தையும் போட்டு நோட்டீசில் கிண்டல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, மற்றொரு போஸ்டரில் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா என விமர்சனம் செய்து நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் நோட்டீஸ் அடித்தவர் பெயர், அச்சடித்தவர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ளது. இது போஸ்டர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...