பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த போளிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர், முத்துசாமி. உடுமலைரோடு சின்னாம்பாளைத்தில் உள்ள ஒரு தனியார் மஞ்சி மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த போளிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர், முத்துசாமி. உடுமலைரோடு சின்னாம்பாளைத்தில் உள்ள ஒரு தனியார் மஞ்சி மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் மாரிமுத்து (26), கூலி தொழிலாளி. இவர், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவரது தந்தை, அவரை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வந்ததாக தெரிகிறது.. இந்நிலையில், தன்னை தந்தை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தினால், தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி மாரிமுத்து சொல்லி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், தனது தந்தை வேலைபார்க்கும் மஞ்சி மில் எதிரே உள்ள உடுமலை ரோட்டின் ஒரு பகுதியில் திடீர் என பெட்ரோல் நிரப்பிய கேனுடன் மாரிமுத்து குடிபோதையில் வந்தார். சிறிது நேரத்தில் கேனில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று காலையில் சிகிச்சை பலனிற்றி மாரிமுத்து இறந்தார்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவரது மகன் மாரிமுத்து (26), கூலி தொழிலாளி. இவர், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவரது தந்தை, அவரை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வந்ததாக தெரிகிறது.. இந்நிலையில், தன்னை தந்தை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தினால், தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி மாரிமுத்து சொல்லி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், தனது தந்தை வேலைபார்க்கும் மஞ்சி மில் எதிரே உள்ள உடுமலை ரோட்டின் ஒரு பகுதியில் திடீர் என பெட்ரோல் நிரப்பிய கேனுடன் மாரிமுத்து குடிபோதையில் வந்தார். சிறிது நேரத்தில் கேனில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று காலையில் சிகிச்சை பலனிற்றி மாரிமுத்து இறந்தார்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.