கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் நந்தகுமார் (22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் நந்தகுமார் (22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நந்தகுமார் அவருடன் படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நந்தகுமார், அவரது பெற்றோரிடம் அவரது காதல் குறித்து தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு உடனே திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர்கள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக தேர்விததாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த சில நாட்களாக நந்தகுமார் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தகுமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் 174 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நந்தகுமார் அவருடன் படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நந்தகுமார், அவரது பெற்றோரிடம் அவரது காதல் குறித்து தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு உடனே திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர்கள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக தேர்விததாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த சில நாட்களாக நந்தகுமார் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தகுமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் 174 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.