கோவை: வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஒரே மாதத்தில் மூன்று முறை ரேஷன் கடையை நாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஒரே மாதத்தில் மூன்று முறை ரேஷன் கடையை நாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தாய்முடி எஸ்டேட். இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நியாயவிலை கடை பொருட்களை வழங்குவதற்காக ஒரே ஒரு ரேஷன் கடை தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இங்கு வந்த 5 காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவு, ஜன்னல் மற்றும் சுவரை உடைத்து கடையினுள் இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கோதுமை ஆகிய பொருளை தூக்கி வீசி சேதப்படுத்தியது. இதன் காரணமாக கடை முற்றிலும் நாசமானது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து அடிக்கடி ரேஷன் கடையை உடைப்பதால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த கடையை காட்டுயானைகள் மூன்று முறை உடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வனத்துறையினரும் தோட்டக் காவலர்கள், மக்கள் இணைந்து காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியில் தீ மூட்டி காவல் காத்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தாய்முடி எஸ்டேட். இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நியாயவிலை கடை பொருட்களை வழங்குவதற்காக ஒரே ஒரு ரேஷன் கடை தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு இங்கு வந்த 5 காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவு, ஜன்னல் மற்றும் சுவரை உடைத்து கடையினுள் இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கோதுமை ஆகிய பொருளை தூக்கி வீசி சேதப்படுத்தியது. இதன் காரணமாக கடை முற்றிலும் நாசமானது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து அடிக்கடி ரேஷன் கடையை உடைப்பதால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த கடையை காட்டுயானைகள் மூன்று முறை உடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வனத்துறையினரும் தோட்டக் காவலர்கள், மக்கள் இணைந்து காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியில் தீ மூட்டி காவல் காத்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.