பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.61 லட்சம்!

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் கிடைத்தது.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் வசூலானது.

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கு ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் வ.ஆனந்த், கோயில் கண்காணிப்பாளர்கள் அருண் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிலையில், 9 தட்டு காணிக்கை உண்டியலில் காணிக்கையாக 11 லட்சத்து 61 ஆயிரத்து 750 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.



கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டதால் தட்டுக்காணிக்கை உண்டியல் மட்டும் எண்ணப்பட்டது. வேறொரு நாளில் நிரந்தர உண்டியல்களின் காணிக்கை எண்ணப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...