ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுவிக்காவிட்டால் வரும் 30ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் - கு.இராமகிருட்டிணன்

கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுவிக்காவிட்டால் வரும் 30ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.


கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுவிக்காவிட்டால் வரும் 30ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை (முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்) உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



அப்போது, ராஜீவ் காந்தி வழக்கில் கொலை செய்யப்பட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இராமகிருட்டிணன் தமிழக சட்டமன்றம் அவர்களை விடுதலை செய்து கொள்ளலாம் என்று கூறியும் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், நீதிபதி சிபிஐ அதிகாரிகள் சிலர் கூட பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி விடுதலை செய்யாமல் 29 ஆண்டுகளாக சிறையில் வைத்து கொடுமை செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.

மேலும், இந்தியாவை பொறுத்தவரை ஆயுள் தண்டனையின் காலம் என்பது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் இருக்கும் நிலையில், இவர்கள் மட்டும் 29 ஆண்டு காலமாக சிறையில் அடைத்து வைத்து கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், காந்தியை கொல்வதற்கு துணையாக இருந்த கோட்சே கூட பத்து ஆண்டுகளில் சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், இவர்களுக்கு மட்டும் ஏன் 29 ஆண்டுகள் ஆகியும் கூட சிறை தண்டனையிலிருந்து விடுவிக்கவில்லை. உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லை எனில் வருகிற 30ம் தேதியன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...