நீலகிரி: குன்னூர் ரேலியா அணையின் மொத்த கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளதால் தடையில்லா தண்ணீர் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி: குன்னூர் ரேலியா அணையின் மொத்த கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளதால் தடையில்லா தண்ணீர் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணையில் நீர் இருப்பு கடந்த சில மாத காலமாக 33 அடி அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை அணையைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது உள்ள நீர் இருப்பினை கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் தடையில்லா குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும் எனவும், பெள்ளட்டி மட்டம், கரன்சி தடுப்பணைப் பகுதிகளில் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதால், குன்னூரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணையில் நீர் இருப்பு கடந்த சில மாத காலமாக 33 அடி அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை அணையைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது உள்ள நீர் இருப்பினை கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் தடையில்லா குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும் எனவும், பெள்ளட்டி மட்டம், கரன்சி தடுப்பணைப் பகுதிகளில் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதால், குன்னூரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.