கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ரேங்க் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 48.71 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சிக்கு 45வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ரேங்க் பட்டியலில் 48.71 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சி 45வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மத்திய அரசு நிதி உதவியுடன் கோவையில் இந்த திட்டம் கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் 23வது இடத்தில் கோவை மாநகராட்சி இருந்தது.
இந்த நிலையில், திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியது தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு ரேங்க் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதில் சேலம் 8வது இடத்திலும் ஈரோடு 18வது ரேங்கிலும், திருப்பூர் 24வது ரேங்கிலும் உள்ளது. ஆனால், 48.71 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சி 45வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் கூறுகையில், கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பொழுது வெளியிட்டுள்ள இந்த பட்டியல் மாதம் ஒருமுறை வெளி வரக்கூடியது. இதனுடைய மொத்த வேலை கணக்கை கருத்தில் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் பட்டியல் தான் சரியானது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் சுமார் 1,570 கோடிக்கு பணிகள் வரையறுக்கப்பட்டன. தற்போது ரூபாய் 1,015 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குப்பைகளை மறுசுழற்சி கழிவு, மறுசுழற்சி திட்டங்கள் போன்றவை முழுமையாக வராததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என லட்சுமணன் தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மத்திய அரசு நிதி உதவியுடன் கோவையில் இந்த திட்டம் கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் 23வது இடத்தில் கோவை மாநகராட்சி இருந்தது.
இந்த நிலையில், திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியது தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு ரேங்க் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதில் சேலம் 8வது இடத்திலும் ஈரோடு 18வது ரேங்கிலும், திருப்பூர் 24வது ரேங்கிலும் உள்ளது. ஆனால், 48.71 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சி 45வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் கூறுகையில், கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பொழுது வெளியிட்டுள்ள இந்த பட்டியல் மாதம் ஒருமுறை வெளி வரக்கூடியது. இதனுடைய மொத்த வேலை கணக்கை கருத்தில் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் பட்டியல் தான் சரியானது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் சுமார் 1,570 கோடிக்கு பணிகள் வரையறுக்கப்பட்டன. தற்போது ரூபாய் 1,015 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குப்பைகளை மறுசுழற்சி கழிவு, மறுசுழற்சி திட்டங்கள் போன்றவை முழுமையாக வராததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என லட்சுமணன் தெரிவித்தார்.