மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்து வேலி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு - தோட்ட உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் தோட்டத்து வேலி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் தோட்டத்து வேலி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தடாகம், சிறுமுகை, நரசிபுரம், ஆனைகட்டி, கணுவாய் உட்பட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் குடிநீருக்காக ஊருக்குள் வருவது வழக்கமாகி கொண்டிருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் அதனை வெடி வைத்து விரட்டி வந்த வண்ணம் உள்ளனர்.

அதேபோல, அடிக்கடி ஊருக்குள் வந்து பல்வேறு விதமான பயிர்களை நாசம் செய்து செல்வது வழக்கம். இதனிடையே, தற்பொழுது தொடர்ந்து பருவ மழை பெய்வதால் நீர்ப்பெருக்கு அதிகமாக இருப்பதால் யானைகள் மீண்டும் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த பெத்திக்குட்டை புதுக்காடு பகுதியில் வசிக்கும் முருகேசன் (40) என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் மின்சார வேலி அமைத்து, வாழை மரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காக ஊருக்குள் வந்த போது, வாழைத்தோட்ட மின்சார வேலியில் பட்டு, தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அதைப் பார்த்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சிறுமுகை போலீசார் ஆண் யானையை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வாழைத் தோட்டத்தின் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...